அம்மா

.வெறுமையாய் த‌னிமைக்குள்
சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம்
அமைதிக்குள் தொலைந்துவிட‌
நினைக்கின்ற‌ ம‌ன‌ம்
இவைக‌ளை இய‌ல்பாய்
இணைக்கின்ற‌ கோடாய்
நின் புன்ன‌கையின் சாய‌ல்
நினைவுக‌ளில்-அன்னையே.
வாழ்க்கைப் பாதையில்
வலிமிகும் பொழுதுகளில்
ஏக்கங்கள் எழுந்து
எரிக்கின்ற வேளைகளில்
உணர்வுகள் உடைந்து
உயிர்சுடும் கணங்களில்
தாங்க முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
உணர்வற்ற ஜடமாய்
வார்த்தைகள் வடிந்து
வலியோடு வருமொரு
முனகல் ’அம்மா’
மெல்ல வலிகுறைந்து
கண்ணில் நீர் நிறைந்து
ஏக்கப் பெருமூச்சொன்று
எழுந்து அடங்கிவிட
மீண்டும் முன்புபோல்
முட்டி மோதியேனும்
முன்னேற வைக்கும்
உன்னத உணர்வு - அம்மா