உதிர்ந்துதான் போனாய் என்று 

ஏங்கி நீ விடாதே கண்ணீர் 

பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் 

பாய்ந்தோடும் ஆறாய் சேரும் 


வானத்து நீர் வீழ்ந்துதான் 

பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும் 

நிலத்தில் வீழ்கின்ற விதையே 

பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும் 


தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து 

சோகத்தில் உறங்கிட வேண்டாம். 

உறக்கத்தில் நீ இருந்தாலும் 

பறக்க விட்டு விடு உன் புத்தியை 


புதுமையை தேடு வாழ்வில் 

அதை கண்டதும் ஏங்கணும் பகைவர் 

பயத்தினால் நடுங்கணும் அவர்கள் 


தமிழா இரவும் பகலும் உண்டேல் 

அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு 

பகைவரின் வெற்றியின் பின்னால் 


சில கயவர் நிச்சயம் இருப்பார் 

தோல்வியில் அனைவரும் 

அழுதால் அந்த கயவர் வெல்வார்கள் 


இரை தேடி தோற்ற புலி 

பசியாலே படுத்து செத்தது உண்டா? 

தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும் 


வெற்றிக்காய் நீ உழைத்தால் 

அது உன்னை அரியாசனத்தில் 

இட்டு மகுங்கள் சூட்டிடும் 


நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு 

இரும்பே வளையும் இடியே முனகும் 


ஓடும் நீருக்கு தடை இட்டால் 

அது கூடி உரையே அழித்திடும் 

ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் 

பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும் 


தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி 

வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு 

விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி 

தமிழா நாளையே பெரு வெற்றி 

உன்னை வந்து சேரும் அது வரை காத்திரு..

Omm Sai Appa சாய் நாதரின் அற்புதம் ௐ சாய் ராம்

 .வெறுமையாய் த‌னிமைக்குள்

சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம்

அமைதிக்குள் தொலைந்துவிட‌

நினைக்கின்ற‌ ம‌ன‌ம்


இவைக‌ளை இய‌ல்பாய்

இணைக்கின்ற‌ கோடாய்

நின் புன்ன‌கையின் சாய‌ல்

நினைவுக‌ளில்-அன்னையே.


வாழ்க்கைப் பாதையில்

வலிமிகும் பொழுதுகளில்

ஏக்கங்கள் எழுந்து

எரிக்கின்ற வேளைகளில்


உணர்வுகள் உடைந்து

உயிர்சுடும் கணங்களில்

தாங்க முடியாமல்

தவிக்கும் தருணங்களில்


உணர்வற்ற ஜடமாய்

வார்த்தைகள் வடிந்து

வலியோடு வருமொரு

முனகல் ’அம்மா’


மெல்ல வலிகுறைந்து

கண்ணில் நீர் நிறைந்து

ஏக்கப் பெருமூச்சொன்று

எழுந்து அடங்கிவிட


மீண்டும் முன்புபோல்

முட்டி மோதியேனும்

முன்னேற வைக்கும்

உன்னத உணர்வு - அம்மா